தமிழில் நடந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளையை போல்,கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தி பாச்சிலர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இதிலும் கல்யாணத்திற்கு தயாரான ஒருவர் தனது துணியை பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும்.
தி பாச்சிலர் நிகழ்ச்சியின்,2018 ஆம் ஆண்டின்,22 வது சீசன் போட்டியாளர் அரி லுயுண்டிக் ஜூனியர்,இவர் இறுதி போட்டியில் ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்,ஆனால் அடுத்த வாரமே அந்த உறவை முறித்து கொண்டு,நிகழ்ச்சியி அடுத்த போட்டியாளரான லாரன் புர்ன்ஹமிடம் தனது காதலை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாக இணையத்தில் வெளியிட்டது,அதற்கு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில்,அது பொய் எனவும்,முட்டாள்கள் தினத்திற்கு விளையாட்டாக செய்தோம் எனவும் செய்தி வெளியிட்டனர்.இது மக்களிடையே கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.குழந்தை பிறப்பு,குழந்தை பெரு என்பது விளையாட்டு விஷயமல்ல,இது மிகவும் கொடிய செயல்,இது நகைச்சுவை அல்ல என்று பலவாறாக மக்கள் இந்த ஜோடியை திட்டி தீர்த்து வருகின்றனர்.