சிகிச்சைக்கு பிறகு வயிற்று வலி குணாமாகவில்லை. மீண்டும் இது தொடர்பாக பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணிற்கு சிறுநீரககோளாறு ஏதும் இல்லை என்பதும், தவறுதலாக டயாலிஸ் சிகிச்சை அளித்தும் தெரியவந்தது. தவறான சிகிச்சை அளித்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை டீன் ஓய்.கே. குப்தா உத்தரவிட்டார்.
விசாரணையில் முன்னதாக பீகாரில் ஷாகாஸ்ரா ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறிவிட்டதே தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது.
தவறான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்களிலும் முறைகேடுகள் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 7-ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தவறான சிகிச்சை செய்தது பின்னர் தான் தெரிந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் டி.கே.சர்மா கூறியுள்ளார்.