தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குபவர்.
இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. அவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர்.மேலும், இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார்.
அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகு சிறிய குடும்ப பிரச்சனைகளால் பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட விளங்கினார்.
அவ்வப்போது ஏதாவது முக்கிய நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க குடும்பமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு தற்போது மீண்டும் பல நிகழ்ச்சிகள், படங்கள் என்று முகம் காட்டுகிறார்.
இந்த நிலையில், நேற்று இந்தியாவையே குலுக்கிய அவலம் தான் காஸ்மீரில் உள்ள ஆசிபா என்கிற 8 வயது சிறுமியின் பலாத்கார கொடூர சம்பவம். இந்த விஷயத்தை அறிந்த டிடி-யால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லையாம். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார் டிடி.