கிளிநொச்சி பிரதேசத்தில் விசேட தேவைகளை உடைய 28 பேருக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன.
குண்டசாலை உடல் ஊனமுற்றோருக்கான நிலையத்துடன் இணைந்து கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம் இந்த நடவடிக்கையை கடந்த சனிக்கிழமை மேற்கொண்டுள்ளது.
கிளிநொச்சி நல்லிணக்க நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து அரச அதிகாரிகளின் உதவியுடன் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் அவர்களிலிருந்து சுமார் 28 பொதுமக்கள் தெரிவுசெய்யப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.
வட பகுதி மக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தையும் , வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் இதுபோன்ற பல சமூக நலத்திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.