2018ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி இடம்பெற்று வருகின்றது.
கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்று நேற்று இடம்பெற்றது. இதில் பெல்ஜியம் அணி ஜப்பானை வீழ்த்தியது. 3 – 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளின் வீரர்களும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர்.
எனினும் போட்டியின் முதல் பாதி முடியும் வரை இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர் ஜெங்கி ஹராகுசி 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதற்கமைய ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.