இரத்தினபுரி – கல்லெந்த விகாரையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பௌத்த தேரர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த தேரர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரி ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விசாரணை ஒன்றுக்காக இரத்தினபுரி கல்லெந்த விகாரைக்கு சென்ற போதே குறித்த பொலீஸ் அதிகாரியை பௌத்த தேரர் அவர்கள் கழுத்தை நெரித்ததாகவும் இதில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தேரர் சம்பவ தினம் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில் அவரின் கைக்கு தாக்குதல் மேற்கொண்டு அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.