இலங்கையில் பதவிக்காக மாத்திரம் செயற்படும், இலங்கை அரசியல்வாதிகளுக்கு மத்தியில் செங்கலடி பேருந்து தரிப்பு நிலைய மலசலகூடத்தை ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் நல்லையா சரஸ்வதி சாந்தி சுத்தம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் சரஸ்வதி சாந்தி கருத்து தெரிவிக்கையில்,“பிரதேசசபை ஆரம்பமாகி நான்கு மாதங்கள் கடந்தும் இந்த மலசலகூடம் சுத்தம் செய்யப்படவில்லை.
பல தடவை பிரதேச சபைக்கு இது சம்மந்தமாக தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதன் காரணமாக தாம் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நானே ஈடுபட்டுள்ளேன்.
குறித்த மலசலகூடத்தினை செங்கலடி பிரதேசத்திற்கு வரும் பல்வேறு பிரதேச மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.