திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்களின் கண்ணீர் புடை சூழ வந்து சேர்ந்த கருணாநிதியின் உடல் தற்போது இறுதிச் சடங்குகளுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தவிர்த்து உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பேராசிரியர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல கருணாநிதி உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின், மகள் செல்வி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் கருணாநிதி உடல் அருகே உள்ளனர்.
மகள் செல்வி தாங்க முடியாத துயரத்துடன் அழுதபடி தனது தந்தையின் உடல் அருகே அமர்ந்துள்ளார்.