பிரிட்டனில் இறந்த மகனின் விந்தணுவை வைத்து பெற்றோர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த 50 வயதான பணக்கார தம்பதியினரின் 26 வயது மகன் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இறந்த மகனின் விந்தணுவை சிறுநீரக சிறப்பு மருத்துவர் ஒருவரின் உதவியுடன், பிரித்தானியாவில் இருக்கும் கடுமையான சட்டத்தினால் அதனை அமெரிக்காவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பெண்ணின் கருமுட்டை உதவியுடன் விந்தணு செலுத்தப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து அமெரிக்க மருத்துவர் David Smotrich கூறியதாவது;
இறந்த ஒரு மனிதனின் விந்தணு அடுத்த 72 மணிநேரம் உயிருடன் இருக்கும்.
அப்படி இருக்கும்போது தான் அந்த இளைஞரின் விந்தணு எடுக்கப்பட்டது. அங்கு உள்ள கடுமையான சட்டங்களை தவிர்த்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.
பின்பு கடந்த 2015 ஆம் ஆண்டு குழந்தை பிறந்ததும், குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோர்களாக குறித்த தம்பதியினர் பெயரிடப்பட்டு அதன்பிறகு பிரித்தானியாவிற்கு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.