பொதுவாக தெய்வ சிலைகள் எல்லாம் கருங்கல் கொண்டு செதுக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு காரணம் இதுவரை யாரும் கண்டறியாத ரகசியமாகவே உள்ளது.
பெரும்பாலும் கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் கருங்கற்களை கொண்டுதான் வடிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திரம் வைத்திருக்கும் நம் முன்னோர்கள் இதற்கும் ஒரு ரகசியத்தை சொல்கின்றனர்.
பொதுவாக உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமாக இருப்பதால், கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கருங்கல்லானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து வகை பஞ்சபூதங்களினுடைய தன்மைகளையும் தன்வசம் கொண்டுள்ளது.
கருங்கல்லில் நீர் இருப்பதால் தான், கல் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது.
பஞ்ச பூதங்களில் ஒன்றாக கருதப்படும் நிலம் கல்லில் உள்ளது. அதனால் தான், கல்லில் செடி, கொடிகள் வளர்கின்றது.
கற்களை உரசும் போது அதிலிருந்து தீப்பொறி வருவதால், அது நெருப்பையும் தன் வசம் கொண்டுள்ளது.