மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில், அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டதிட்டங்களை மீறி மாடுகளை ஏற்றிச் சென்றதால் மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் சாரதி ஒருவரையும் பொலிஸார் நேற்று முற்பகல் கைதுசெய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், மாடுகளை கொண்டுச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் இன்றி, சிறயதொரு வாகனத்தில் பயனபடுத்தி ஆறு மாடுகளை உணவின்றி மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கி கொண்டுச் சென்றதால் குறித்த சம்பவத்தின்போது ஆறு மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் சாரதி ஒருவரையும் வவுணதீவு பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மழை பெய்துகொண்டிருப்பதால் பொலிஸார் தம்மை கவனிக்க மாட்டார்கள் எனும் நோக்குடன் மழை பெய்யும் நேரம் பார்த்து மேற்படி மாடுகள் காத்தான்குடி நோக்கி கொண்டுச் செல்லப்பட்டபோது கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.