சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்தை வழிநடத்திச் செல்லவேண்டும். முடியாவிட்டால் பதவி விலகி சுயாதீனமாக செயற்படக்கூடிய ஒருவரை நியமித்துக்கொள்ள இடமளிக்க வேண்டுமென பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறு ப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதே சபாநாயகரின் கடமையாகும். ஆனால் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் வகையிலே செயற்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் கடந்த 3 தினங்கள் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்ததும் சபாநாயகரின் நடவடிக்கையாகும். அவர் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சுயாதீனமாக செயற்பட்டிருந்தால் இப் பிரச்சினை ஏற்பட்டிருக்கா தெனத் தெரிவித்துள்ளாா்.