Loading...
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
குறித்த தாக்குதலில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட எழுதுமட்டுவாள்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
Loading...
சம்பவம் தொடர்பில் மேலும்.,
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மீதே எழுதுமட்டுவாள்ப் பகுதியில் வைத்து இன்று இரவு 8.45 மணியளவில் சரமாரியான கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...