குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த மேலும் பலரை கைது செய்ய பாரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சிறுமி அநுராதபுரம் – தந்திரிமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் மூத்த சகோதரனின் நண்பனால் குறித்த சிறுமி இதற்கு முன்னர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞன் அதன்பின்னர் சிறுமியை கடவத்தை- மேல் பியன்வில பிரசேத்திற்கு அழைத்துச் சென்று திருமணமான நபர் ஒருவருக்கும் பல இளைஞர்களுக்கும் 1000 ருபாய்க்கு விற்பனை செய்தததாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரான குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கடவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.