நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு வெளியில் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது.
இது மிக சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதற்கு எச.டி 21749பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரமென்றும் காணப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
புதயி இக்கிரகம் குளிர்ச்சியான கிரகமாகும். இது பூமியை விட 3 மடங்கு பெரியதாகவும் இதில் பாறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கிகைத்தில் உயிரினங்கள் வாழ தகுதியுடையவை என்றும், இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளதாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிரகத்தில் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனதும், இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளதனால், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டி.இ.எஸ்.எஸ்.’ விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
அந்தவகையில், அமெரிக்காவின் நாசாமையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த செயற்கை கோள் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகத்தை தற்போது கண்டு பிடித்துள்ளது.