Loading...
நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் நேற்று இரவு காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
Loading...
நேற்று இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த போது இவர்களை கைது செய்தனர். கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Loading...