குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
குழந்தையை மீட்டும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தேசிய மீட்பு குழுவினர், மற்றும் 6 தனி நபர்கள் முயற்சித்தனர். இந்நிலையில், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ரிங் இயந்திரம் மூலம், பக்கவாட்டில் 110 அடி ஆழத்தில் குழி தோண்ட முடிவு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும், அவ்வாறு குழி தோண்டப்படும் பொழுது குழியில் இறங்கி குழந்தையை மீட்கள் மூன்று தீயணப்பு வீரர்கள் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7பேர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கண்ணதாசன், தீலீப் குமார்,மணிகண்டன் ஆகியோரும், ராஜராஜன் மற்று தனபால் ஆகிய இருவரும் மூச்சை அடக்கி குழியில் இங்கும் அளவிற்கு பயிற்சி பெற்ற இருவர் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிச்சத்திற்கு பேட்டரி, ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் கமெரா ஆகியவை அவர்கள் எடுத்து செல்ல உள்ளனர்.