மேலதிக வகுப்பிற்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய பதினான்கு வயது மாணவி தன் காதலனுடன் இரவு முழுவதும் விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில், மறுதினம் காலை படல்கும்பறை பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மாணவி வைத்திய அறிக்கையைப் பெறுவதற்காக பொலிசாரால் படல்கும்பறை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுமியின் சிறிய தாய் படல்கும்பறைப் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து விடுதியொன்றின் அறையில் இருந்த குறித்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாணவியுடன் இரவு முழுவதும் இருந்த மாணவியின் காதலன் தலைமறைவாகியுள்ளார்.
மாணவியை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியபோது தனது காதலனும், தானும் ஒன்றாகவே மேலதிக வகுப்பில் கல்வி கற்பதாகவும் அவர் எங்கிருக்கின்றார், அவரது பெற்றோர் யார் என்ற விபரங்கள் தனக்குத் தெரியாதென்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலதிக வகுப்பிற்குச்சென்ற நாங்கள் இருவரும் விடுதி அறையில் ஒன்றாக தங்கியிருந்ததாகவும் அதிகாலை தனது காதலன் தன்னை அறையில் இருக்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றதாகவும் மாணவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி சிறிய தாயின் பராமரிப்பிலேயே வா