Loading...
நேற்று மாலை 3.45 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை புகையிரத நிலையம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற உடரட மெனிக்கே புகையிரதமே இவ்வாறு வட்டகொடை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகள் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தது. அது மட்டுமன்றி பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.
அதன்பின் மற்றுமொரு புகையிரதத்தின் மூலம் சுமார் இரண்டு மணித்தியாலயங்களின் பின் பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டனர்.
Loading...
எனினும் ரயில் பாதையை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் வழமைப்போல் செயற்படும் என ரயில்வே நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...