கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க
விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத் தேர்வின் முடிவுகளை விசா விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள இச்சூழலில், PTE (Pearson Test of English) தேர்வு ரத்தாகியுள்ளது.
இதனால் பல வெளிநாட்டினர் விசாவுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
தேர்விற்கான திகதிகள் ஒதுக்கப்படாததால் அவுஸ்திரேலியாவில் பல வெளிநாட்டு மாணவர்கள், நிரந்தர விசாவுக்கு திட்டமிட்டிருப்பவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
“ஆங்கில மொழி சோதனை பெரும்பாலான விசாக்களுக்கு முன்நிபந்தனையாக உள்ள நிலையில், வரும் நாட்களில் விசா தாமதத்திற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும்,”
கொரோனா காரணமாக தேர்வு எழுதுவதில் சிக்கல் உள்ளமை குறித்து அவுஸ்திரேலிய உள்துறை அறிந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத் தேர்வில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில், அவர்களுக்கு தேர்வு எழுத மேலும் கால அவசாசம் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.