இந்தியாவில் ஆண் குழந்தை இல்லை என்பதற்காக மனைவி மற்றும் மகளை கொடூரமாக தாக்கிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள Vasant Kunj பகுதியைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும் அவருக்கு ஆண் குழந்தை மீது மிகுந்த ஈடுபாடு இருந்ததாக கருதப்படுகிறது.
ஆனால் திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், ஆண் குழந்தை இல்லாத நிலையில், ஆத்திரமடைந்த அவர் தன் மனைவி மற்றும் மகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி டெல்லியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் நபர் இப்படி செய்திருப்பதுதான் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் மனைவியை தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், அவர் மீது எதிர்ப்புகள் கிளம்பி வருவதாக கூறப்படுகிறது.