தமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்களும் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 407 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்தது. தற்போது 8,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 17,082 பேரில், 10,831 பேர் ஆண்கள், 6,246 பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 4,02,680 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 11,428 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.