அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை அடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த உச்சபட்ட சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயம்இன்று நள்ளிரவு (28) முதல் நடைமுறைக்கு வருவதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம்
கீரி சம்பா – ரூபா 125
சம்பா வெள்ளை/ சிவப்பு – ரூ.98
நாட்டரிசி – ரூ.96
இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய,
ஒரு கிலோகிராம்
கீரி சம்பா – ரூபா 125
சம்பா வெள்ளை/ சிவப்பு – ரூ.90
நாட்டரிசி – ரூ.90
பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு – ரூ.85