Loading...
ஹங்வெல்ல எலமலவெல பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி சாரதியொருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த வெலிபில்லேவ பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சாரதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Loading...
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை சுயதொழில் தேசிய முச்சக்கர வண்டி சங்க தலைவர் சுனில் ஜயவர்த்தன இரண்டு தினங்களுக்கு முன்னர் அடித்து கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...