Loading...
தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்..
Loading...
இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ….
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை – 200 கிராம்
- பச்சை கொத்தமல்லி – 50 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- நல்லெண்ணை – 600 கிராம்
- பசுவின் பால் – 200 மில்லி
செய்முறை
- கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட வேண்டும்.
- ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
- நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்த்து விட வேண்டும்.
Loading...