அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் பேரழிவு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் புதிய முடக்கநிலையை அந்நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இதன் பிரகாரம் மாநிலத் தலைநகர் மெல்பேர்னில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளில் இருப்பதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு சில அடிப்படைகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து 5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன் ஒருநாள் உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல முடியுமென தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.