வாழ்வின் அடிப்படை சாராம்சங்களில் ஒன்று உணவு. நல்ல உணவைக் கொடுத்தால் ஒருவரை மயக்கியே விடலாம்.
ஆனால் ஒரு சராசரி நாளில் நம் உணவானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித நல்ல அல்லது தீய விளைவுகளைக் கொண்ட பலவித பொருட்களை கொண்டது.
சில உணவுகள் உடலுக்கு தீங்கு என்று சொல்லப்படும் அதே வேளை சில நல்ல உணவுகளும் சரியாக உண்ணப்படாவிட்டால், நம் உடலில் தீமையை ஏற்படுத்தும்.
நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில உலகிலேயே மிக ஆபத்தான உணவுகள் என்பதை நாம் சரியாக இன்னும் உணரவில்லை.
நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
குளிர்பதனப்படுத்தப்பட்ட உணவு
பல உணவகங்கள் இதுப்போன்ற உணவுகளை நல்ல தரம் வாய்ந்த உணவு என்று சொல்லி உங்களுக்குத் தருவதுண்டு. இது உண்மையில்லை என்பதோடு, உணவகங்களில் தரப்படும் இந்த குளிர்பதனப் பொருட்கள் மிகவும் ஆபத்து நிறைந்த உணவுகள். முக்கியமாக கேன்சரை உருவாக்கும் பெரும்பாலான காரணிகளை உள்ளடக்கியவை.
பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவே உண்ணுங்கள். இதில் உபயோகப்படுத்தப்படும் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமற்றவை.
உறையிடப்பட்ட சிப்ஸ்
இவை சுவைகூட்டச்செய்ய பெரும்பாலும் எம்எஸ்ஜி எனப்படும் மோனொசோடியம் க்ளூட்டாமெட் எனப்படும் உப்பைக் கொண்டவை. சாதாரண உப்பைப் போல் அல்லாமல், இது கார்சினோஜன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் காரணியைக் கொண்டது. எனவே பாக்கெட்டிலிடப்பட்ட சிப்ஸ் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இவையும் சாப்பிடத்தகாத உணவுகளே. பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறிப்பாக சுவையூட்டப்பட்ட அல்லது பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டவை. உயிருக்கு ஆபத்தான கேன்சர் போன்ற கொடிய நோய்களை ஊக்குவிக்கக்கூடியவை.
பர்கர்
பெரும்பாலான பர்கர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டவை. இவை உப்பை அதிகமாகக் கொண்டுள்ளதோடு, இதில் உபயோகப்படுத்தப்படும் சாஸ் எனப்படும் சுவையூட்டிகள், சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் உடலுக்கு ஆபத்தான கொழுப்பைக் கொண்டவை.
மைக்ரோவேவ் பாப்கார்ன்
ஆரோக்கியமற்ற ஆபத்தான கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் நோய்களின் பட்டியலில் நிச்சயம் இந்த மைக்ரோவேவ் பாப்கார்ன் இடம் பிடிக்கும். இதில் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் ஊறு விளைவிக்கும் உப்பின் அளவு இடம் பெற்றுள்ளது.
வெள்ளை சாதம்
வெள்ளை சாதம் உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து ஆகியவற்றை, தொடர்ந்து பல வருடங்களுக்கு உண்டு வந்தால், இவை உடலுக்கு கவலை அளிக்கக்கூடியதாக மாறலாம்.