Loading...
இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தன்னுடைய காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் கெஞ்சிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. 24 வயது மதிக்கதக்க இவர் கடந்த வியாழக்கிழமை இவருடைய காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
Loading...
இந்நிலையில், தற்போது இந்த பெண் அவருடைய காதலர் என்று அறியப்படும் பல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரிடமும், அவருடைய வருங்கால மாமியாரிடம் போனில் கண்கலங்கி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Loading...