தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசுவொன்று உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
சம்பவத்தில், கிரான்- சின்னவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கனகரெட்ணம் செல்வராணி தம்பதிகளின் பெயரிடப்படாத குழந்தையே மரணித்துள்ளது.
வழமைபோன்று தாய், குழந்தைக்கு தாய்ப்பால் அருந்தச் செய்த வேளையில் பால் புரைக்கேறி குழந்தை மரணித்துள்ளது.
இதேவேளை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வதியும் மற்றொரு தாய், குழந்தை பிரசவித்த நிலையில் அக்குழந்தையும் உடனே மரணித்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் நாகப்பிரியா (வயது 27) என்ற பட்டதாரி பயிலுனரான இரண்டு மாத ஆண் குழந்தையின் தாய், புற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஏற்கெனவே புற்றுநோய்க்கான சிகிச்சையின் பிரகாரம் ஒரு கால் அகற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைப்பட்டுள்ளது.