யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூதர்மட சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல திறக்கப்படவில்லை.
இரவு நேர காவலாளி வழக்கம் போல அதிகாலையிலேயே கதவை திறந்து, காலையில் கடமையை கையளிப்பது வழக்கம். இந்நிலையில் அவரை காணவில்லை என அலுவலக பணியாளர்கள் அனைவரும் வீதியிலேயே காத்திருந்தனர்.
இதனைஅயடுத்து , கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த
பொலிசார் நடத்திய சோதனையில், பூட்டப்பட்ட அலுவலகத்தின் உள்ளே காவலாளி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சி.ரகுநாதன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.