தேவையான பொருட்கள்:
பால் – 500 மி.லி.
சம்பா ரவை – 200 கி
நெய் – 2 ஸ்பூன்கள்
சர்க்கரை – 1 கப்
முந்திரிப்பருப்பு – 8 முதல் 10
கிஸ்மிஸ் – 8 முதல் 10
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்
செய்முறை:
* பாலை தண்ணீர் சேர்க்காமல், பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
* ஒரு சட்டியில், நெய்யையும் முந்திரிப்பருப்பையும் சேர்த்து கலந்து, அது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின் அதனுடன் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து, அது பஞ்சு போன்று வரும் வரைக்கும் மீண்டும் வதக்கவும்.
* அதே சட்டியில், சம்பா ரவையை சேர்த்து, சிறு தீயில் வைத்து நன்றாக கிண்டவும்.
* நன்றாக கொதிக்க வைத்த கெட்டியான பாலை சம்பா ரவையுடன் சேர்க்கவும். கட்டி ஏற்படாமல் நன்றாக கிளறவும்.
* பின் அதனுடன் ஏலக்காய் பொடி, சர்க்கரை, வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்க்கவும்.
சுவையான சம்பா ரவை பாயாசம் தயார்.
சம்பா ரவை பாயாசத்தை சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறலாம்.