யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும், இதன்போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுணாவில் சந்திக்கு அண்மையில் டயர் கடைக்கு முன்பாக டயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2020/12/g-4.jpg)
![](https://www.theevakam.com/wp-content/uploads/2020/12/fdy.jpg)