Loading...
மறுசீரமைக்கப்பட்ட ஆறு நடமாடும் கொவிட் சோதனை பேருந்துகள் வார இறுதியில் வெளிவருமென மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுபயன்படுத்தப்பட்ட டி.டி.சி பேருந்துகளிலிருந்து தயாரிக்கப்பட்ட நடமாடும் சோதனை தளங்கள் உள்ளன. இவை நகரம் உள்ளூர் சுகாதார ஒருங்கிணைப்பு வலையமைப்போடு இணைந்து செயற்படும்.
Loading...
ரொறன்ரோவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில சமூகங்களுக்கு கோவிட் -19 ஏற்படுத்திய தாக்கத்தை நிவர்த்தி செய்ய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் இந்த வார இறுதியில் நகரத்தின் வடமேற்கில் உள்ள சுற்றுப்புறங்களில் தொடங்கி செயற்படக்கூடும். மேலும் இதை நகரத்தின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Loading...