யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தை சேர்ந்த சந்தை வர்த்தகர், வவுனியாவை சேர்ந்த தாயும் மகளும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தொற்று உறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் பத்து நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வவுனியா திரும்பியவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக்குளத்தைச் சேர்ந்தவர்களான 28 லயதான தாயும், 05 வயதான பிள்ளையும் வீட்டில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்து நாட்கள் கடந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.