Loading...
நைஜீரியாவில் பக்கெட்டுக்குள் வாழ்க்கையை நடத்தி வந்த பெண் Rahma Haruna காலமானார்.
நைஜீரியாவின் Lahadin Makole என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் Rahma Haruna.
6 மாத குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட காய்ச்சலால், அவரது கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சியடைவது பாதிக்கப்பட்டது.
19 வயதாகிவிட்ட Haruna ஆல் தனியாக எங்கும் செல்ல இயலாது, இதனால் தனது மகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க கூடாது என எண்ணிய் தாய், பிளாஸ்டிக் கிண்ணத்தில் தனது மகளை வைத்து, அவள் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்து சென்று வந்தார்.
Haruna- வின் இளைய சகோதரன் Fahad, அக்காவுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
உறவினர்களை பார்த்து பேசி மகிழ்வதிலேயே சந்தோஷம் என்றும், மளிகை கடை நடத்தி வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று Rahma Haruna காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, திடீரென ஏற்பட்ட நோயின் தாக்கமே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Loading...