பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 68ஆயிரத்து 053பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்து 325பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 29இலட்சத்து 57ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 79ஆயிரத்து 833பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 64ஆயிரத்து 821பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 929பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 64ஆயிரத்து 821பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.