இயற்கை அன்னைக்கு நமக்கு எது சிறந்ததென்று தெரியும். அவள் நமக்கு சுவையான காய் கனிகளை அளித்துள்ளாள். அவற்றில் ஒன்று வெண்ணெய்ப் பழம் என்று அறியப்படும் நமது சொந்தக் கனியான அவகடோவாகும்.
அவகடோ அதன் பாலாடை போன்ற வெண்ணெய் போன்ற தன்மையினால் “இயற்கையின் வெண்ணெய்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சொர்க்கத்தின் பழத்தில் பி, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை உங்கள் கூந்தல், நகங்கள் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
அவகடோ உங்கள் சரும அமைப்பை மேம்படுத்தி பருக்கள், முகப்பரு, வயது முதிர்வு காரணமாக ஏற்படும் புள்ளிகள் ஆகியவற்றிற்கு நிவாரணமளித்து மேலும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் உணரச் செய்கிறது.
இதர இயற்கையான மூலக்கூறுகளுடன் கலந்த அவகடோ முகப்பூச்சு உங்கள் சருமத்தின் மீது அற்புதங்களை நிகழ்த்தும்.
இந்தக் கட்டுரையில் நாங்கள் அதன் அற்புதமான நற்பலன்களைப் பற்றி உங்களுக்கு சொல்லவிருக்கிறோம் மேலும் அவகடோ முகப்பூச்சுக்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று காட்டவிருக்கிறோம். விரைவாக ஒரு முறை பார்வையிடுவோம் வாருங்கள்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் அவகடோ முகப்பூச்சு:
தேனில் நுண்ணுயிர் எதிர்ப்பு மூலக்கூறுகள் அடங்கியுள்ளது, இது பருக்கள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு குணமளிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் ஆகும். இது அவகடோவுடன் கலக்கும் போது அற்புதங்களை செய்கிறது. இவை ஒன்றிணைந்து சருமத்துளைகளை சுத்திகரிக்கவும், சருமத்தை இறுக்கவும் மற்றும் வயது முதிர்வை குறைக்கவும் உதவுகிறது.
இங்கே நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது:
பயன்படுத்துவது எப்படி:
1. பழுத்த அவகடோவை மசித்துக் கொண்டு அத்துடன் 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து கொள்ளுங்கள்.
2. இந்த கலவையை உங்கள் முகம் முழுவதும் பரவலாகத் தடவுங்கள்.
3. 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்.
4. பிறகு சாதாரண தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள்.
வெள்ளரிக்காய் மற்றும் அவகடோ:
வெள்ளரிக்காயில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதை அவகடோவுடன் கலக்கும் போது இந்தக் கலவை ஒரு மாயஜாலம் போல செயல்படுகிறது.
பயன்படுத்துவது எப்படி:
1. அவகடோ பழக்கூழை மசித்துக் கொண்டு வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து கொள்ளுங்கள்.
2. இந்த முகப்பூச்சை உங்கள் முகம் முழுவதும் சமமாகப் பூசுங்கள்.
3. 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்.
4. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
5. வாரம் ஒரு முறை இந்த செயல்முறையை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.
ஓட்ஸ் மற்றும் அவகடோ:
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளது. ஓட்ஸ் சரும எரிச்சலுக்கு குணமளிக்க உதவுகிறது மேலும் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து சருமத்திற்கு ஈரப்பதமளிக்கிறது.
பயன்படுத்துவது எப்படி:
1. வேகவைத்த ஓட்ஸையும் அவகடோவையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.
2. இந்தக் கலவையை உங்கள் முகத்தில் சமமாகத் தடவுங்கள்.
3. உலரும் வரை கலவையை அப்படியே விட்டுவிடுங்கள்.
4. பிறகு சாதாரணத் தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள்.
5. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள்.