பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி கே.கே நகர் அருகே ஐயப்பன் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர்
கீதா (வயது 43). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவரது கணவர் இளையராஜா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கீதா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கே.கே நகர் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.