நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் (வயது 80) மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலைக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தமிழன், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் உள்ள வீடடில் இன்று காலமானார்.
மறைந்த செந்தமிழன் அவர்களின் இறுதிச்சடங்கு அரணையூர் கிராமத்தில் நாளை மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ,