பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசியால் மூளை இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு 35 வயதுடைய பெண் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதுடைய ஆசிய பெண் Oxford/AstraZeneca தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த இரத்தக்கசிவு காரணமாக அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Oxford/AstraZeneca தடுப்பூசியால் அப்பெண்ணின் மூளை இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், பக்கவாதத்தால் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பெண் மரணம் குறித்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தடுப்பூசி போட்ட பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய 37 வயது பெண் மற்றும் 43 வயது ஆண் குறித்து மருத்துவர்கள் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.
தடுப்பூசியால் இரத்த குழாயில் இரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.