மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மலேசிய பிரதமர் உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரதமரின் உடல்நிலை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், இன்று ஜூலை 4ம் திகதி பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிரதமர் முஹைதீன் யாசின் உடல்நிலை சீராக உள்ளது, செரிமான மண்டல தொற்றுக்கு சிகிச்சை பெற்றவுடன் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.
அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது, சிகிச்சை பெறும்போது அவர் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என பிரதமர் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முஹைதீனுக்கு மேற்கொள்ளப்பட்ட முழுமையான சுகாதார பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியானதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.2018 ஆம் ஆண்டில், முஹைதினுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கடந்த ஜூன் மாதம் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக அறிவித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.