ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசும் மோதினர். கிராண்ட்சிலாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசும் மோதினர்.
இதில் பெரெட்டினி 6-3, 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.
இதில் பெரெட்டினி (இத்தாலி)- ஹர்காக்ஸ் (போலந்து), ஜோகோவிச் (செர்பியா) – ஷபோவலோவ் (கனடா) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) கெர்மரி (ஜெர்மனி) மோதுகிறார்கள்.
மற்றொரு அரை இறுதியில் பிளிஸ்கோவா (செக் குடியரசு)- சபலென்கா (பெலாரஸ்) பலப்பரீட்சை நடத்துகின்றார்கள்.