மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இதுவரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். அத்துடன் மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இன்று இது தொடர்பில ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூவரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருமாக 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, களுவாஞ்சிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52 பேருக்கும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் உட்டபட 250 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி நாளாந்தம் கொரோனா தொற்றாளர் வீதம் அதிகரித்து செல்வதுடன் ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், தொடர்ந்து சுகாதார வழிமுறைகளை பேணி நடப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.