கொவிட் தொற்று பரவலால் மூடப்பட்டு இருந்த பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது.
இதற்கமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளுக்கமைவாக மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களும் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
தரம் 09 க்கு உட்பட்ட அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை, ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
சுகாதார சிபார்சு கிடைத்தவுடன் தரம் ஒன்றிலிருந்து 09 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.