தனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு வினோதம் நிகழ்த்த வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ‘பீட்சா’ என்றால் கொள்ளை பிரியம்.
பல வகையான ‘பீட்சா’க்களை சாப்பிட்டு ருசி பார்த்த அவர் அதையே திருமணமும் செய்து கொண்டார். அந்த இளம் பெண்ணின் பெயர் கிறிஸ்டினா வாக்னர் (18).
‘பீட்சா’ மீது அளவுக்கு அதிகமாக பிரியம் கொண்ட கிறிஸ்டினாவுக்கு அதன் மீது காதல் ஏற்பட்டது. எனவே பீட்சாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர் தனது பாட்டியின் திருமண உடையை எடுத்தார்.
அதை எடுத்து அணிந்து தன்னை புது மணப்பெண் ஆக்கி கொண்டார். இந்த விவரத்தை தனது நெருங்கிய நண்பரும், புகைப்பட கலைஞருமான மெர்சி ஹாரிசிடம் தெரிவித்தார்.
உடனே அவர் கிறிஸ்டினா வீட்டிற்கு விரைந்து வந்தார். அதை தொடர்ந்து திருமண உடையுடன் பீட்சாவை கையில் ஏந்தியபடியும், கடித்து சுவைத்தபடியும் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார்.
பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அதை கணவராக ஏற்றுக் கொண்டதாகவும் ‘பேஸ்புக்’ கில் தகவல் வெளியிட்டார். பல போட்டோக்களையும் உடன் பிரசுரித்து ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளார்.