டயகம பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்தே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக டயகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த டயகம காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/12/dxs-1.jpg)
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/12/sad-2.jpg)
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/12/sde.jpg)