ஆஞ்சநேயர் மிளகு வடையை கோவில்களில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து – 200 கிராம்
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகு – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
உளுந்தை நன்கு நீரில் கழுவி 30 நிமிடம் மட்டும் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த உளுந்தை தண்ணீர் சேர்க்காமல், வடைக்கு மாவு அரைப்பதை விட சற்று நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் உடைத்த மிளகு மற்றும் சீரகத்தை, உப்பு சேர்த்து பிசையவும்.
கடாயில் எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் மாவை தட்டையாக தட்டி நடுவில் சற்று துளையிட்டு எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான அனுமார் வடை தயார்.
இந்த வடை பல நாட்கள் ஆனாலும் கெடாது என்பது இதன் சிறப்பம்சம்