நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது இது போன்றவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.
இந்த நீரிழிவு நோயினால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
எனவே நீரிழிவு நோயை குணப்படுத்த இயற்கை ஒரு அற்புதமான தீர்வு உள்ளது இதோ.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி (தனியா) – 1/2 கிலோ
- வெந்தயம் – 1/4 கிலோ
செய்முறை
கொத்தமல்லி மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின் இரண்டையும் நன்றாக அரைத்து பொடி செய்து, கலக்க வேண்டும். இந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை எடுத்து 2 டம்ளர் நீரில் போட்டு அதை நன்றாக கொதிக்க வைத்தால், பானம் தயார்.
குடிக்கும் முறை
தினமும் இந்த பானத்தை மூன்று வேலை உணவு சாப்பிடுவதற்கும் 1 மணி நேரத்திற்கு முன் குடித்து வர வேண்டும்.
குறிப்பு
இதேபோல் ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும். இந்த பானத்தை சாப்பிடுவதற்கு முன் மற்றும் பின் பரிசோதனை செய்து பார்த்தால் இதற்கான பலனை உணரலாம்.