பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் சூரியன்- சனி சேர்க்கை இடம்பெற உள்ளது. இக்காலத்தில் சனியின் தாக்கம் சூரியன் மீது கடுமையாக இருக்கும்.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. இந்த அற்புதமான சேர்க்கையானது பிப்ரவரி 12 ஆம் தேதி நிகழவுள்ளது.
சூரியன் பிப்ரவரி 12 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் கும்ப ராசியில் சனி- சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது.
அப்படியாயின், கும்ப ராசியில் நிகழும் சனி- சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சனி- சூரியன் சேர்க்கை
மேஷ ராசி
மன தைரியம் அதிகரிக்கும்
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.
ரிஷபம் ராசி
விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
மிதுனம் ராசி
செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.
கடகம் ராசி
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும்.
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்.
சிம்மம் ராசி
நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கன்னி ராசி
புதிய முயற்சி சாதகமாக முடியும்.
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
துலாம் ராசி
மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
காரம் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் விநாயகப்பெருமானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விருச்சிகம் ராசி
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
தனுசு ராசி
புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
மகரம் ராசி
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
அம்பிகையை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.
கும்பம் ராசி
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
லட்சுமி நரசிம்மரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
மீனம் ராசி
வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
மகாலட்சுமியை வழிபட தடைகள் நீங்கும்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.