பொதுவாக சாஸ்திரங்களில் குறிப்பிட்ட பல விடயங்கள் இன்று அறிவியல் துறையையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு வியப்பூட்டுவதாக காணப்படுகின்றது.
சாஸ்திரங்களையும் சம்பிரதாய முறைகளை சரிவர பின்பற்றியதால் தான் நமது முன்னோர்கள் நீண்ட ஆயுள் மற்றும் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.
அந்த வகையில் இந்த நளன் – தமயந்தி கதையை படிப்பதால் சனி தோஷம் வாழ்க்கை முழுவதும் கிட்டவே நெருங்காது என குறிப்பிடப்படுகின்றது.
நளன் – தமயந்தி கதை
காட்டிலுள்ள குகை ஒன்றில் ஆகுகன், ஆகுகி என்ற வேடுவ தம்பதியினர் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் அவ்வழியே வந்த துறவி ஒருவரை உபசரித்தனர்.
இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினார்கள்.அந்த சிறிய குகைக்குள் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.
தன் மனைவி ஒரு அந்நிய ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் ஆகுனனுக்கு துளியளவும் இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார்.
அன்றிறவு அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த பின் ஆகுகியும் அதே சநமயம் உயிர் துறந்தாள்.
சுயநலமில்லாத இத்தம்பதியினர் தான் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். அந்த துறவி மறுபிறவியில் அன்ன பறவையாக பிறந்தார்.
நளன் நிடதநாட்டின் மன்னராக காணப்பட்டான். இவ்வாறு இருக்க ஒருநாள் அன்னப்பற வையைக் கண்டான்.
நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக நான் தூது சென்று வருகிறேன்” என அன்னம் சென்றது.
அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தியும் நளன் மீது காதல் கொண்டாள்.அவளின் சுயம்வரத்திற்கு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது.
இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்களும் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். தேவர்கள் எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர்.நிஜ நளனும் அந்த சுயம்வரத்தில் பங்கேற்றான்.
புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். இவர்களின் வாழ்கையும் மகிழ்ச்சியாக சென்றது.
தமயந்தியை அடைய முடியாமல் போனதால் தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கட்டளையிட்டார்கள்.
ஆனால் கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரால் நெருங்கவே முடியாது. அவர்களை ஏதும் செய்ய மாட்டார்.
அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
இப்படியிருக்க ஒரு நாள் பூஜைக்கு தயாரான போது, நளன் சரியாகக் கால் கழுவ தவறிவிட்டார். “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
சனியின் பிடியில் இருந்த நளன், புட்கரன் என்பவனிடம் சூதாட ஆரம்பித்து தனது பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான்.
காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தை களை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டி ல் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றி யது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள்.
ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்ற பாம்பு கடித்து கருப்பாக மாறினான்.
அந்த பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிது பன்னனின் தேரோட்டியாக மாறினான்.
அவன் அங்கிருப்பதை கண்டுப்பிடித்த தமயந்தி, நளனை காண வேண்டும் என்பதற்கான தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள்.
ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக தன்னனுடன் வந்தான். திருநள்ளாறு தலத்தை அடைந்த பின்னர் ஏழரைச்சனி நீங்கியது.
தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றுக்கொண்டான்.
அப்போது சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கொடிய துன்பத்துக்கு பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார்.
அப்போது நளன் “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் இனி யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணும் படகூடாது.
என் கதையை படிப்பவர்களை நீங்கள் பிடிக்க கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அதற்கு இணங்கி அருள் புரிந்தார். அதனால் தான் நளன் – தமயந்தி கதையை படிப்பவர்களை சனிதோஷம் நெருங்காது என்பது ஐதீகம்.